வார்த்தைகளும் வேற்றுமை உருபுகளும் -1
வார்த்தைகளுடன் வேற்றுமை உருபுகள் சேரும் போது அந்த வார்த்தைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது ஸம்ஸ்க்ருதம் கற்பவர் அறியவேண்டியவற்றில் மிகவும் முக்கியமானது. தமிழிலும் இது உண்டு. உதாரணத்துக்கு,
1.ராமன்
2.ராமனை
3.ராமனால், ராமனுடன், ராமனோடு
4.ராமனுக்கு
5.ராமனிடமிருந்து
6.ராமனுடைய
7.ராமன் மேல்
8.ஏ ராமா!
இதே போல் பிரதிப்பெயர்ச்சொற்களுக்கும் மாற்றங்கள் வருகின்றன.
நான்
என்னை
என்னால், என்னுடன், என்னோடு
எனக்கு
என்னிடமிருந்து
என்னுடைய
என் மேல்
..........
ஆனால், சம்ஸ்க்ருதத்தில் ஒரு சொல் எந்த உயிர் எழுத்தில் முடிகிறது என்பதைப் பொருத்து இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலும் சம்ஸ்க்ருதத்தில் ஒருமை, பன்மை மட்டும் அன்றி, இருமை என்று ஒன்று உண்டு. இது அவ்வளவாக உபயோகப்படாவிட்டாலும், சில இடங்களில் வரும். (உ-ம்) ராம லக்ஷ்மணர்கள் என்பதற்கு 'राम लक्ष्मणौ' என்று வரும் .இறைவனின் இரு பாதங்களுக்கு 'पादौ' என்று வரும். நாம் இப்போது ஒருமை, பன்மைகளை மட்டும் பார்க்கலாம்.
अकारान्त: पुल्लिन्ग: - 'राम' शब्द:
'அ' வில் முடியும் ஆண்பால் சொல்- 'ராம'
ஒருமை பன்மை
राम: ராமன் रामा: ராமர்கள்
रामम् ராமனை रामान् ராமர்களை
रामेण ராமனால், ராமனுடன், रामै: ராமர்களால்,
ராமர்களுடன்,
रामाय ராமனுக்கு रामेभ्य: ராமர்களுக்கு
रामात् ராமனிடமிருந்து रामेभ्य: ராமர்களிடமிருந்து
रामस्य ராமனுடைய रामाणाम् ராமர்களுடைய
रामे ராமன் மேல் रामेषु ராமர்களின் மேல்
राम् ஏ ராமா! रामा: ஏ ராமர்களே!
இவற்றை மட்டும் படித்து விட்டால், நிறைய வார்த்தைகளுக்கு பொருள் புரிந்து விடும். 'அ' வில் முடியும் பெரும்பாலான ஆண்பால் சொற்கள் இதே போல் தான் மாறும்.
சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
ReplyDelete