करारविन्देन पदारविन्दं
मुखारविन्दे विनिवेशयन्तम् ।
वटस्य पत्रस्य पुटे शयानं
बालं मुकुन्दं मनसा स्मारामि ॥१॥
அரவிந்தம்- தாமரை.
करारविन्देन - கையாகிய தாமரையால்
पदारविन्दं- பாதமாகிய தாமரையை
मुखारविन्दे- வாயாகிய தாமரையில்
विनिवेशयन्तम्- வைத்துக்கொண்டிருப்பவனை ।
वटस्य पत्रस्य पुटे शयानं-ஆல் இலையின் மேல் சயனித்திருப்பவனை
बालं मुकुन्दं - குழந்தை முகுந்தனை
मनसा स्मारामि- மனதால் ஸ்மரிக்கிறேன். Kara-Aravindena
( இந்த ஸ்லோகத்திலும் இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' உபயோகிக்கப்பட்டுள்ளது)
உலகமெல்லாம் பிரளயத்தில் அழிந்த பின்னர் ஒரு சிறு குழந்தையாய், குஞ்சுக்கையால், குஞ்சுக்காலைப்பிடித்து, குஞ்சு வாயில் வைத்தவாறே ஆல் இலை மேல் படுத்துக்கொண்டு இருக்கும் குழந்தை முகுந்தனை வழிபடுவதாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.
'பால முகுந்தாஷ்டகம்' என்ற எட்டு ஸ்லோகங்களில் முதலாவதாகிய இந்த ஸ்லோகம் மிகவும் ப்ரபலம்.
இறைவனின் கைகளையும், கால்களையும், கண்களையும் தாமரையாக பாவிப்பது எல்லா காலங்களிலும் எல்லா மொழிகளிலும் இருந்திருக்கிறது.
துளஸிதாஸரின் 'श्री राम चन्द्र क्रुपालु' என்ற அழகான பாடலிலும் இதே போன்ற வர்ணனை வருகிறது.
'नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम |' என்ற வரிகளில் ஸ்ரீ ராமனின் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
कंज என்றால் தாமரை.
नव- புதிய कंज- தாமரை लोचन-கண்கள்
कंज தாமரை मुख- முகம்
कर- கைகள் कंज தாமரை
पद- பாதங்கள் कंजारुणम- சிவந்த தாமரை
( அருணம் என்றால் சிவப்பு. சூரியனின் தேரோட்டிக்கு அருணன் என்று பெயர். ஏனென்றால் சூரியன் வருவதற்கு முன்பே வானம் சிவந்து விடும். தேரோட்டி தேருக்கு முன்னால் தானே அமர்ந்திருப்பான்.)
புதிய தாமரை போன்ற கண்களும், தாமரை போன்ற முகமும், தாமரை போன்ற கைகளும், சிவந்த தாமரை போன்ற பாதங்களும் பெற்று விளங்குபவன் ஸ்ரீராமன் என்று துளஸி தாஸர் உருகுகிறார். தொடர்ந்து வரும் வரிகளில் உள்ள வர்ணனை இன்னும் கூட அழகு.
No comments:
Post a Comment